பகுதி-4 : கைகள், தலையின் எந்த நிலை வணங்குதலில் பிரார்த்தனை கைகூடும் ?

How to pray - stage 1

இதற்கு முன் பகுதியில், பிரார்த்தனைக்கு பலன் பெற விதிகள் என்ன என்று படித்தோம். அதில் முதலாவது ஒருவருடைய ஆன்மீக, பக்தியின் உயர்வு நிலை:  

  • நமது ஆன்மீக தரம் 60 % க்கு மேலே இருந்தால், பிரார்த்தனை தேவை இல்லை. ஆண்டவன் கட்டளைப் படியே ஒவ்வொன்றும் நடக்கிறது, எது வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் அது. அதுவே நம்பிக்கையும் கூட. அதற்கு மூலம் நன்றி தான். 
  • இரண்டாவது, நமது ஆன்மீக பலம் 30%க்கும் கீழே இருப்பது. இந்த தரத்திற்கு வீரியம் இல்லை.  மனோரீதியான பலம் தான். ஏற்கனவே படித்தவாறு, தெய்வீகத்தை தொட தடை போடும் ஒருவருடைய கர்வம், சுயநலம் தான் அதன் காரணம். 
  • ஆகவே, வேண்டுதலுக்கு நேரடியான சராசரி பலன் நடுவில் உள்ள இந்த 30-60%க்குள் ஆன்மீக பலம் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. மேலும், இந்த அணுகு முறை தனி நபர் பலன் தாண்டி சமுதாயம், உலகத்திற்கு பயன் படாது. அது துறவி மகான்களிடம் கூட இருக்காது. 
  • உலகில் 30%க்கும் கீழே ஆன்மீக பலம் உள்ளவர்களும் இருப்பதால், பொதுவான ஒரு அணுகுமுறை பயன் தராது என்பது இந்த மகான்களுக்கும் தெரியும். மேலும், அவர்கள் கடவுள் விருப்பபடி தான் நடக்க முடியும். அது ஆண்டவன் கணக்கு ! அதில் மகான்கள் 'மூக்கை நுழைக்க மாட்டார்கள்'😄! (இந்த ஆன்மீக பலம் ஒரு தனி பாடம். அதை இன்னொரு முறை தனியாக பார்க்கலாம்).  

மெயின் மெனு செல்ல, மேலே இடது பக்கம் உள்ள ஏரோ ⬱ அல்லது  மூன்று கோடுகள் மேல் க்ளிக் செய்யலாம்⏳